Saturday, August 02, 2008

காதல் கடவுள்

இனியவளே!
கண்ணை விட
இதயம்
கடினமானது.....!
சிறு தூசு
விழுந்தாலும்
கண் கலங்குகிறது;
ஆனால்
காதலிக்காத
உன் வார்த்தையை....
அதாவது
இடி போன்ற
உன்
வார்த்தையை
இதயம் தாங்குகின்றது....!
இடியை
தாங்கும்
என்னிதயம் கடினமானதுதானே!
காதலும்
இறைவனை போன்றது;
உண்டு என்றால் உண்டு;
இல்லை என்றால் இல்லை;
உணர்பவனுக்கு உண்டு;
உணராதவனுக்கு இல்லை;
காதலும்
இறைவனை போன்றது....

4 comments:

Anonymous said...

உண்மைதான்....
உங்கள் வரிகள் உணர்வுடன் இருக்கு

ரசிகன்! said...

காதலும்
இறைவனை போன்றது;
உண்டு என்றால் உண்டு;
இல்லை என்றால் இல்லை;
உணர்பவனுக்கு உண்டு;
உணராதவனுக்கு இல்லை;//

நச்சுனு இருக்கு :)

Anonymous said...

iniyavane.... yen kathaluku mattum kavignargal

Anonymous said...

rasiganuku.... kathal illai yendru yaarum vathada villaiye