Friday, August 01, 2008

காதலும் உயிரும்

இனியவளே!
சிரிக்காத
ரோஜாவுக்கு
அழகு எதற்கு?
சுற்றாத
சூரியனுக்கு
கதிர் எதற்கு?
ஒளிராத
நிலவுக்கு
பொலிவு எதற்கு?
சில்லிடாத
சோலைக்கு
தென்றல் எதற்கு?
உன்னிடம்
காதலை சொல்லாத
எனக்கு
இதயம் எதற்கு?
காதலை
நான்
சொல்லி
நீ
வெறுத்து விட்டால்
எனக்கு
உயிர்தான் எதற்கு?

No comments: