Friday, August 15, 2008

காதலன்

இனியவளே!
என்னுடன்
கண்ணோடு கண்
பேசி
காதல் செய்ய
காதலி வருவாயா?
உயரத்தில்
கதிரவன்தான்
குடை பிடிக்க
காதல் செய்ய
காதலி வருவாயா?

நம்முடன்
தென்றல்தான்
துணைக்கு இருக்க
காதல் செய்ய
காதலி வருவாயா?

கைகள்தான் தொடாமல்
தொட்டு
காதல் செய்ய
காதலி வருவாயா?

இதுவெல்லாம் வேண்டாம்
காதலன்
நீதான் என்று
காதலை சொல்ல
காதலி வருவாயா?

வாழ்க்கை

இனியவளே!
சிரித்துக்
கொண்டே
என்னை
அழ வைக்கிறாயே...!
ஏன்
காதலித்து
கொண்டே
என்னை
வாழ வைக்கலாமே....!!!!

நினைவு

இனியவளே!
கதிரவன் தான்
காலையில்
விழிக்காமல்
இருந்தாலும்;
உயிரிகள்தான்
உறக்கம்
தெளியாமல்
இருந்தாலும்;
தென்றல்தான்
இதம்
தராமல்
இருந்தாலும்;
நான்
உன் நினைவு
இல்லாமல் இருக்க மாட்டேன்!!!

Wednesday, August 06, 2008

ஒற்றைகால் ரோஜா

இனியவளே!
ஒற்றைக்காலில்
நிற்கும்
ரோஜாவை
பறித்து,
அதை
ஊனப்படுத்தி
உன்னிடம்
கொடுத்து
வந்த காதல்
பின்பு
என் மனதை
ஊனப் படுத்தி விடுமா?
நீ
என் காதலை மறுப்பதால்...!
ரோஜாவும் முள்ளும்
ஒன்றாகதான் உள்ளது;
அது காதலாகாதுதான்!
நிலவும் மேகமும்
ஒன்றாகதான் உள்ளது;
அது காதலாகாதுதான்!
ஆனால்
எனக்கும் உனக்கும்
காதல் இல்லை
என்று கூறாதே!!!

Tuesday, August 05, 2008

தூது

இனியவளே!
தென்றலே
என்னவளிடம்
காதலை சொல்லுவாயா?
அவள் இல்லாமல்
நீயும் சுடுகிறாயே!
சூரியனே
என்னவளிடம்
காதலை சொல்லுவாயா?

அவள் இல்லாமல்
என் பொழுது விடிய வில்லையே!
நிலவே
என்னவளிடம்
காதலை சொல்லுவாயா?

அவள் இல்லாமல்
உன்னையும் பிடிக்கவில்லையே!
நதியே
என்னவளிடம்
காதலை சொல்லுவாயா?

அவள் இல்லாமல்
உன் ஓட்டம்தான் பிடிக்கவில்லையே!
நீங்களாவது
அவளிடம்
என் காதலை சொல்லுவீர்களா?
ஏனென்றால்
அவள் விழியை
பார்த்த பின்
என் காதலைதான்
மறைத்து விடுகிறேனே..............!

சமத்துவ சமுதாயம்

இனியவளே!
இறந்தவர்களை
புகழ்கிறது
சமுதாயம்;
இல்லாதவர்களை
வர்ணிக்கிறது
சமத்துவம்;
ஆனால்
இறக்காமல்
இருக்கும்
உன்னைப்பற்றி
மட்டும்
பேசும்
என் கவிதை.....!
சோலையும்
தேன்றலையும்
பிரிக்க முடியாது;
சூரியனையும்
பிரகாசத்தையும்
பிரிக்க முடியாது;
விண்மீனையும்
இரவையும்
பிரிக்க முடியாது;
அதுப்போல
உன் நினைவையும்
என்னையும்
பிரிக்க முடியாது;

Sunday, August 03, 2008

கவிதையா? நானா?

இனியவளே!
உன்னை
வர்ணித்து
கவிதை எழுதி தந்தேன்;
அதை
படித்த
நீ
என்னை
விரும்பாமல்
கவிதையை விரும்பினாய்;
உனக்கு தெரியுமா?
உன்னை
உயிருக்குயிராய்
விரும்புவது
கவிதை அல்ல....!
நான்தான்....!
உன் விழியை
கூர்மையானது
என்றேன்;
தவறாகிவிட்டது
ஏனென்றால்
உன் விழி
என் இதயத்தையே
கிழித்து விட்டது

Saturday, August 02, 2008

காதல் கடவுள்

இனியவளே!
கண்ணை விட
இதயம்
கடினமானது.....!
சிறு தூசு
விழுந்தாலும்
கண் கலங்குகிறது;
ஆனால்
காதலிக்காத
உன் வார்த்தையை....
அதாவது
இடி போன்ற
உன்
வார்த்தையை
இதயம் தாங்குகின்றது....!
இடியை
தாங்கும்
என்னிதயம் கடினமானதுதானே!
காதலும்
இறைவனை போன்றது;
உண்டு என்றால் உண்டு;
இல்லை என்றால் இல்லை;
உணர்பவனுக்கு உண்டு;
உணராதவனுக்கு இல்லை;
காதலும்
இறைவனை போன்றது....

Friday, August 01, 2008

சொல்லாத காதல்

இனியவளே!
என் இதயம்
எத்தனை முறை
துடிக்குது
தெரியுமா?
என்னிதயம்
அத்தனை முறையும்
உன்னை
நினைப்பது
புரியுமா?
வெறி பிடித்து
உனை
பார்த்த
கண்கள்
வெறித்து விட,
தறிக் கெட்டு
போன
மனசு
துடித்து விட,
கரிக்கும்
கண்ணீரும்
தீர்ந்து விட,
காதலிக்கும்
உன்னிடம்
காதலை சொல்ல முடியவில்லை.....!

தவிப்பு

இனியவளே!
நான்
வீணாக்கிய
நாட்களில்
மிகவும் வீணான
நாட்கள்
உன்னைப்
பார்க்காத நாட்களே!
என் மனதில்
இருக்கும்
காதலை
மனசு
இல்லாத
உன்னிடம்
எவ்வாறு சொல்லுவது?
தனியாக
இருக்கும் பொழுது
"நான்
உன்னை
காதலிக்கிறேன்"
என்று
சொல்லி பார்க்கிறேன்;
உன்னிடம்
அதை
சொல்ல முடியாமல்
தவிக்கிறேன்!

ஆசை

இனியவளே!
என்னை
காதலிக்காத
உன் இதயத்தை
பெயர்த்து எறிந்து விடு;
என்னை
பார்க்காத
உன் விழியை
பிடுங்கி எறிந்து விடு;
என்னிடம் காதல் செய்யாத
உன் கையை
வெட்டி எறிந்து விடு
என்று
சொல்ல மாட்டேன்...!
நீ
காதலிக்காத
உன்னை
காதலித்த
என் இதயத்தை
பெயர்த்து எறிந்து விடு!
நீ
வெறுத்த
என்னுயிரை
அழித்து எரித்து விடு!
உன்னை
வர்ணித்து
கவி எழுதிய
என் கையை
வெட்டி எறிந்து விடு!
இந்த
ஆசைகளை மட்டும்
நிறைவேற்றுவாயா?

காதலும் உயிரும்

இனியவளே!
சிரிக்காத
ரோஜாவுக்கு
அழகு எதற்கு?
சுற்றாத
சூரியனுக்கு
கதிர் எதற்கு?
ஒளிராத
நிலவுக்கு
பொலிவு எதற்கு?
சில்லிடாத
சோலைக்கு
தென்றல் எதற்கு?
உன்னிடம்
காதலை சொல்லாத
எனக்கு
இதயம் எதற்கு?
காதலை
நான்
சொல்லி
நீ
வெறுத்து விட்டால்
எனக்கு
உயிர்தான் எதற்கு?