இனியவளே!
கடிகாரத்தில்
சின்ன முள்ளும்
பெரிய முள்ளும்
மணியை ஓட விட...
உதயனும்
ஊரை சுற்றிவிட்டு
உதித்த இடத்திற்கு ஓடி விட...
நிலாவும்
நினைத்த இடத்தில்
ஒளியை பிரகாசிக்க...
ஆர்ப்பாட்டம்
நடந்த
சாலையெல்லாம்
அடக்கி வாசிக்க...
என்னிதயம் மட்டும்
படபடப்புடன்
என் உயிரை
உன்னிடத்தில்
கொடுத்து விட்டு
துடிக்கிறது...!
அர்த்தமில்லா
காரணம் சொல்லி
மறுத்து விடுவாயா
என் காதலை?
வேண்டாமென்று
வெறுத்து விடுவாயா
என்னை?
தெரியவில்லை...!!!
இருந்தாலும்
நீயே
என் காதலி
என்
நினைவிருக்கும் வரை....
என்
நினைவு
உனக்கு
ஞாபகப்ப்டுத்தும்
என் காதலை
நீ
என்னை
நினைக்கும் வரை...!!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment