இனியவளே!
நடக்கும் போது
முடியும் இடம்
தெரியவில்லை;
பார்க்கும் போது
வேறு ஒன்றும்
தெரியவில்லை;
பேசும் போது
சொல்லும் வார்த்தை
புரியவில்லை;
தூங்கும் போது
தூக்கமும் வந்தது இல்லை;
தனித்த போது
இனிமையாக
இருந்ததில்லை;
காதலிக்கும் போது
உன் பதிலும்
தெரியவில்லை;
இந்த
அவஸ்தையெல்லாம்
இல்லாமல் இருக்க
இனியவள்
நீ
என்னை காதலிப்பாயா?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment