Monday, April 07, 2008

நம்பிக்கை

இனியவளே!
நித்தம்
வந்து முத்தமிடும்
தென்றல் சுடுமா?
மணம்
தந்து மனம் பறிக்கும்
பூக்கள் முட்கள் ஆகுமா?
ஆதவன்
ஆர்ப்பாட்டம் அடங்கிய பின்
நிலா வருமா?
தெரியவில்லை...
இனியவன் என்னை
இனியவள் நீ காதலிப்பாயா?
கட்டாயம் காதலிப்பாய்
என்ற
நம்பிக்கையில்
நம்பிக்கை வைத்து
காத்திருப்பேன்....!

ஒரு தலை காதல்

இனியவளே!
குழம்ப வேண்டாம்;
குழப்பமும் வேண்டாம்;
இனியவள் நீயே!
என்னிடம்
சொல்லி விட்டு
காதல் வர வில்லை;
அதனால்
உன்னிடம்
சொல்லி விட்டு
நானும் காதலிக்க வில்லை!
உன்னை
என்னுடன் பழக சொல்லவில்லை;
என்னை காதலிக்க சொல்கிறேன்!
உன்னிடம்
சொல்லி விட்டு
காதலிப்பதை விட
சொல்லாமல்
காதலிப்பதே சுகம்...
ஏனென்றால்
உன்னிடம் காதலை
சொல்லி,
என்னை நீ
மறுத்து வெறுத்து விட்டால்,
இதயத்தில்
ஏற்படுமே
ஒரு வலி.....
ஏய்
சொல்ல முடியலடி....;

Sunday, April 06, 2008

நினைவு

இனியவளே!
கடிகாரத்தில்
சின்ன முள்ளும்
பெரிய முள்ளும்
மணியை ஓட விட...
உதயனும்
ஊரை சுற்றிவிட்டு
உதித்த இடத்திற்கு ஓடி விட...
நிலாவும்
நினைத்த இடத்தில்
ஒளியை பிரகாசிக்க...
ஆர்ப்பாட்டம்
நடந்த
சாலையெல்லாம்
அடக்கி வாசிக்க...
என்னிதயம் மட்டும்
படபடப்புடன்
என் உயிரை
உன்னிடத்தில்
கொடுத்து விட்டு
துடிக்கிறது...!
அர்த்தமில்லா
காரணம் சொல்லி
மறுத்து விடுவாயா
என் காதலை?
வேண்டாமென்று
வெறுத்து விடுவாயா
என்னை?
தெரியவில்லை...!!!
இருந்தாலும்
நீயே
என் காதலி
என்
நினைவிருக்கும் வரை....
என்
நினைவு
உனக்கு
ஞாபகப்ப்டுத்தும்
என் காதலை
நீ
என்னை
நினைக்கும் வரை...!!!!

நீ வருவாய் என?

இனியவளே!
எழுத்தில்
கவிதையாக...
துக்கத்தில்
கனவாக...
கண்களில்
காட்சியாக...
இதயத்தில்
காதலாக
வந்த
நீ...
எந்த நாள்
காதலியாக
வரப் போகிறாய்?

குழப்பம்

இனியவளே!
நடக்கும் போது
முடியும் இடம்
தெரியவில்லை;
பார்க்கும் போது
வேறு ஒன்றும்
தெரியவில்லை;
பேசும் போது
சொல்லும் வார்த்தை
புரியவில்லை;
தூங்கும் போது
தூக்கமும் வந்தது இல்லை;
தனித்த போது
இனிமையாக
இருந்ததில்லை;
காதலிக்கும் போது
உன் பதிலும்
தெரியவில்லை;
இந்த
அவஸ்தையெல்லாம்
இல்லாமல் இருக்க
இனியவள்
நீ
என்னை காதலிப்பாயா?

ஆதரவு

இனியவளே!
தனிமை
என்றால்
இனிக்கனும்;
தென்றல்
என்றால்
சிலிர்க்கனும்;
மனசு
என்றால்
நினைக்கனும்;
இதயம்
என்றால்
துடிக்கனும்;
காதல்
என்றால்
ஜெயிக்கனும்;
அதற்கு
உன் தயவு
இருக்கனும்;
நம்பிக்கையுடன்
உன் தயவில்
உயிர் வாழ நினைக்கும்
உன்னவனின்
காதல் ஜெயிக்க
ஆதரவு தருவாயா?

இயற்கை

இனியவளே!
ரோஜா
நிறம்
இல்லாமல் இருந்தால்
ரசிக்க முடியாது!
நிலவு
பொலிவு
இல்லாமல் இருந்தால்
பிரகாசிக்க முடியாது!
கடல்
அலைகள்
இல்லாமல் இருந்தால்
வியக்க முடியாது!
இனியவள்
நீ
என் காதலியாக
இல்லாமல் இருந்தால்
என்னால்
உயிர் வாழ முடியாது...!!!

பதில்

இனியவளே!
மனசு
நினைப்பதற்கு
நினைவு கிடைக்கவில்லை;
தூக்கத்தை
இரவில்
தேடினாலும் கிடைக்கவில்லை;
தனிமையில்
இனிமை காண
தனிமையும் கிடைக்கவில்லை;
புரியாத
குழப்பம்
விடையும் கிடைக்கவில்லை;
காதல்
சொல்ல
வார்த்தைகள் கிடைக்கவில்லை;
காதலி
சொல்லும்
வார்த்தையில் அனைத்தும் கிடைக்குமா?

Friday, April 04, 2008

புது சரித்திரம்

இனியவளே!
காதலிக்காத
காதலிகள்
மீது
ஆத்திரம் கொண்ட
காதலர்களை
பாத்திரங்களாக
கொண்ட
சரித்திரம்
சத்தியம் செய்தது
காதலின் முடிவு
தோல்வி என்று....
ஆனால்
இனியவள்
உன்னை
இனியவன்
நான் காதலித்து
புது சரித்திரம்
படைப்பேன்.....!
ஏனென்றால்
சாத்தியக்கூறு உள்ளதடி
என் காதலே
வெல்லும் என்று...!

கணைகள்

இனியவளே!
உன்
புருவ வில்லில்
இருந்து
புறப்பட்ட
பார்வை கணைகள்
என்னை
தாக்கி
இதயத்தில் தைத்தது....!

கிளிப்பிள்ளை

இனியவளே!
சூரியன்
சுற்றுவது அழகு என்றேன்;
சுருதி மாறாமல் அழகு என்றாய்!!!
தென்றல்
தொடுவது இதம் என்றேன்;
தடுமாறாமல் இதம் என்றாய்!
அருவி
துள்ளி வருவது அழகு என்றேன்;
அதுத்த கணமே அழகு என்றாய்!
உன்னை
நான் காதலிக்கிறேன் என்பேன்;
நீயும் காதலிக்குறேன் என்பாயா?

சுயரூபம்

இனியவளே!
ஊரில்
உலவும்
காற்றில்
உயிர்
வாழ வைக்கும்
மூச்சு காற்று
தனி;
மொத்தக்காற்றையும்
சுவாசித்தால்
சுத்தக்காற்று
போக
மிச்சக்காற்று
வெளி வரும்...
அதுப்பொல
என்
மனதில்
இனியவளாக
எவள் வந்தாலும்
அவளின்
ஏமாற்றும்
சுயரூபம் தெரிய
நானும் தெளிய
உன்னை மட்டும் காதலிப்பேன்!!!

தவறா?

இனியவளே!
மேகப்புடவை
கட்டிய
நிலவும்
அந்த
புடவையில்
ஊடுருவும்
சூரியனும் காதலிக்க...
சத்தம் போடும்
அலையும்
அது
முத்தமிடும்
கரையும் காதலிக்க...
சிங்கார
பூக்களும்
ரிங்காரமிடும்
வண்டுகளும் காதலிக்க...
இனியவள்
உன்னை
இனியவன்
நான் காதலித்தால் தப்பா?
இல்லை
நீ மறுத்தால் தப்பா?