Sunday, March 23, 2008

அவஸ்தை

இனியவளே!
கலையிழந்த
பொழுதாக
கதிரவன்
கண் விழிக்க!
திரும்பி திரும்பி படுத்தும்
திரும்ப திரும்ப
மனதை உறுத்தும்
ஓர் நினைவு;
மணி
மணிக்கணக்கில்
ஓடி விட
மதியம் என்பதை
மறந்து
மனக்கணக்கில்
உனை நினைத்து
மனிதர்களையும்
மறந்து
தூங்காமல் தூங்கினேன்
இரவில்;
இந்த
அவஸ்தையெல்லாம்
ஏனென்று
நினைத்து
உன்னை மறக்கலாம் என்று
நினைத்தால்
மீண்டும்
உன் நினைவு...!

1 comment:

Anonymous said...

inthe ranamum thein alleva.. :)