Monday, March 24, 2008

நீயும் காதலி

இனியவளே!
கற்பனையில்
ஒருவனை
காதலித்துப் பார்...!
கால் கடுக்க
காதலனை
பார்க்க
கண்ட இடத்தில் நிற்ப்பாய்;
நெற்றி பொட்டை
நேரா நேரம்
புதியதாக மாற்றுவாய்;
அவன்
விழி இரண்டும்
உனை விழிக்கிறதா?
என்று விழித்து பார்ப்பாய்;
காதலை
சொல்ல
வழி தெரியாமல்
வீட்டு
வழி மறப்பாய்;
தனிமையில்
காதல் ஆட்சி
செய்வதை
இனிமையாக யோசிப்பாய்;
சொல்ல வந்த
வார்த்தையெல்லாம்
மெல்ல மெல்ல
மௌனமாக விழுங்குவாய்;
அவனிடம்
பேசும் போது மட்டும்
வார்த்தை மறப்பாய்;
இப்பொழுது யோசித்துப்பார்...?
உன்னிடம்
காதலை
சொல்ல முடியாமல்
காதலால்
நான் படும்
அவஸ்தைகளை....!

கண் அசைவு

இனியவளே!
ஒரு நொடி போதும்
உன் கண் அசைவிற்கு!
என் காதலை ஏற்றதற்கும்!
நூறு கோடி ஆண்டு வேணும்
உன் இதய வசத்தில்
அடிமயாவதற்கு....!

சிறை

இனியவளே!
வருங்காலத்தில்
உன்னிதயத்தில்
சிறைப்பட போவதை
விலா எலும்பிற்க்குள்
அடைப்பட்ட
என்னிதயம்
உணர்த்துகிறதோ!!

தீர்ப்பு

இதுவரை
காதல் சரியா? தப்பா?
என்று
அறியாமல் இருந்தேன்!
உனைக்
கண்டதும்
தீர்வை
கண்டேன்!!!

உலக கோப்பை

இனியவளே!
உலக கோப்பையை
இதில்
மட்டும்
வென்று விடுவார்கள்
உலக காதலிகள்!
காதலித்த
காதலர்களை
மாற்றுவதில்.....!
அலட்சியமாக
காதலர்களை
மாற்றும்
காதலிகள் இருந்தாலும்,
லட்சியமாக
அவளை
காதலிக்கும்
காதலன் கோழை அல்ல!!
காதலியும் கண்ணகி அல்ல!!

காதல் காட்சி

இனியவளே!
வண்ண வண்ண
கற்பனை
எண்ணம் கொண்ட
கனவில்
உன் நினைவெல்லாம்
திரையிட.....!
காலைக்காட்சி
பகல் காட்சி
இரவு காட்சி அல்ல;
இது
காதல் காட்சி
என
நீயும் நானும்
சந்தித்த பொழுது
கனவில் தெரிய
திடுக்கிட்டு எழுந்தேன்
நள்ளிரவில்....!
மறந்து விடு என்று
நீ சொல்லியதை
ஞாபகப்படுத்தும்
தாடியுடன்!!!

Sunday, March 23, 2008

அவஸ்தை

இனியவளே!
கலையிழந்த
பொழுதாக
கதிரவன்
கண் விழிக்க!
திரும்பி திரும்பி படுத்தும்
திரும்ப திரும்ப
மனதை உறுத்தும்
ஓர் நினைவு;
மணி
மணிக்கணக்கில்
ஓடி விட
மதியம் என்பதை
மறந்து
மனக்கணக்கில்
உனை நினைத்து
மனிதர்களையும்
மறந்து
தூங்காமல் தூங்கினேன்
இரவில்;
இந்த
அவஸ்தையெல்லாம்
ஏனென்று
நினைத்து
உன்னை மறக்கலாம் என்று
நினைத்தால்
மீண்டும்
உன் நினைவு...!

முற்றுபுள்ளி

இனியவளே!
தோல்விகள்
தொடர்கதைதான்
காதலுக்கு!
தோல்விதான்
முற்றுபுள்ளி
எனக்கு.

உலக சாதனை

இனியவளே!
உலக சாதனை
புத்தகத்தில்
இடம் பிடிக்கும்
உலக காதலிகள்...!
காதலித்த
காதலனை
உடனே மறப்பதில்!!!

இடப்பெயர்ச்சி

இனியவளே!
கிரகங்களின்
இடப்பெயர்ச்சி
வாழ்வில்
மாற்றங்கள்
ஏற்ப்படுத்துமாம்...!
தெரியவில்லை.
ஆனால்
நம்
இதயங்களின்
இடப்பெயர்ச்சி
என்
வாழ்வில்
ஏற்ப்படுத்தியது
மாற்றமும்,ஏமாற்றமும்...?

மறக்காதே!

இனியவளே!
உன்னை
தாஜ்மகால்
கட்ட சொல்லவில்லை...
ஆனால்
அணுவாக
உன்னிதயத்தில்
உள்ள
என்னை
மறக்காதே!
நினைப்பதற்க்காக;

தொடக்கவுரை

இனியவளே!
இனி
புரட்டப்படும்
பக்கங்கள்
ஒவ்வொன்றும்
உன்
நினைவு முத்தங்கள்!
நீ
கொடுத்த
முத்தத்தின்
எச்சில் காய்ந்தாலும்
உன்
நினைவு தேயவில்லை...
இதோ
காதல் கிறுக்கல்கள்....

Tuesday, March 18, 2008

கடிகாரம்

இனியவளே!
வாழத்தான் பிடிக்குமா
உன்னை
பிரிந்த நாட்களில்...
கடிகாரத்தையும்
மறந்து போனேன்;
கடிகாரம் எழுதும்
மணிக்கணக்கையும்
மறந்து போனேன்
நீ
என்னுடன்
இருந்த
வேளையில்...!
இன்றோ
என் கடிகாரம் மட்டும்
கணக்கை மறந்து விட்டதா!
நேரமும்
மாறவில்லை
பொழுதும்
விடிய வில்லை
நீ இல்லாமல்!!!

கையெழுத்து

இனியவளே!
திரும்ப திரும்ப
படித்தேன்
உன் கையெழுத்தை!
மாறி விட்டது
என்
தலையெழுத்து!!!

பிரிவு வாழ்க!

இனியவளே!
தொலைந்த
இதயத்தை
தேடினேன்;
தேடினேன்;
உன்னிடம்
தொலைந்த
என்னையும்
சேர்த்துதான்...!
இதயம் மட்டும்
உன் வீட்டு வாசலில்
விழுந்து கிடக்க,
நான் மட்டும்
என் வீட்டில்!
நம்மை பிரியாத
பிரிவு வாழ்க!!!

ஆசைகள் பலவிதம்

இனியவளே!
காதலர்கள்
ஆசைப்பட்டதால்
மனங்கள்
ஒன்றானது...!
பெற்றோர்கள்
ஆசைப்பட்டதால்
திருமணங்கள்
இரண்டானது...!

பெற்றோரின் ஆசை

இனியவளே!
இந்திய திரு நாட்டில்
இந்த காலக்கட்டத்தில்
புதிய
காவியங்களை
உருவாக்குவதற்கு
காதலித்த
காதலனுக்கும்
காதலிக்கும்
திருமணமாம்
வேறு வேறு மண்டபங்களில்...!
பெற்றோர்கள்
ஆசைப்பட்டதால்...!

கல்யாண மாலை

இனியவளே!
காதலிக்கும் பொழுது
காதலி
தரும்
புன்னகை பூக்களை
உதிர்த்து விட்டு
அவள்
ஏமாற்றியவுடன்
காதலனின்
கண்ணீர் பூக்களை
மாலையாக
அணிந்து
காதலி
மண மேடையில்!!!

கூடு விட்டு கூடு

இனியவளே!
உன் இதயத்தை
நானும்
என்
இதயத்தை
நீயும்
மாற்றிக் கொள்வதை
பார்த்து விட்டுதான்
கூடு விட்டு கூடு
பாயும் முறையை
ஆராய்கிறார்களோ!

Monday, March 17, 2008

பிடிவாதம்

இனியவளே!
இதய விளக்கில்
கண்ணீரை
எண்ணெயாகக் கொண்டு
காதல் ரோஜா
உள்ளே எரியுது;
மௌன உதடும்
வெளியே
சிரித்து நடிக்குது;
நம் காதலை
உன் மனமோ
ஏனோ மறைக்குது!!!

நேர்முகத் தேர்வு

இனியவளே!
உலக காதலிகளே
இனி மேலாவது
தோல்வியை
தாங்கி கொள்வார்களா?

என்று
நேர்முகத் தேர்வு வைத்து
காதலர்களை
காதலியுங்கள்!!!

இலவச இணைப்பு

இனியவளே!
உன்
மனக்கடையில்
காதல் புத்தகம்
வாங்கினால்
பின்னாளில்
இலவச இணைப்பாக
தோல்வி கிடைக்குமோ?

வேதனை

இனியவளே!
ஒரு
மணி நேரம்
உனை பார்க்காமல்
மணிக் கணக்கில்
இறைவனிடம்
மன்றாடினேன்...!
ஒரு
நாள்
உனை பார்க்காமல்
பார்க்காத
நாளே
வேண்டாமென்று
விண்ணப்பித்தேன்...!
இனி
நீயே
இல்லையென்றால்
உயிரே வேண்டாம்
என்று
கண்டிப்பேன்...!


---------------------------------------------------
காதலி - தனிமை + காதல் = வேதனை

---------------------------------------------------

பச்சை மர ஆணி

இனியவளே!
நாம்
காதலித்த நாட்கள்
செல்லரித்து போக...
உன்னை
வர்ணித்த கவிதையில்
சொற்கள் பிரிந்து விழ...
நீ
உதடு சேர்த்து கொடுத்த
முத்தம் காய்ந்து போக....
நீ
தொட்ட இடங்களில்
வியர்வை வந்து அழிக்க...
நாம்
சந்தித்த நாட்கள் எல்லாம்
சத்தமில்லாமல் மறைய...
நீ
காதலித்த
என்னை
மணிக்கணக்கில் மறந்து போக...
ஆனால்
பச்சை மர ஆணி போல்
மனதில்
பதிந்த
உன் நினைவு மட்டும்
இன்னும் மறையாமல்......

பெற்றோர்

இனியவளே!
சூரியனும்
நிலவும்
ஊடல் செய்யும்
திரு நாள் இல்லை என்றாலும்;
பூவை
வண்டு
கற்பழிக்கும்
ஒரு நாள் இல்லை என்றாலும்;
சோலையை
தென்றல்
வெறுக்கும்
கோடை நாள் இல்லை என்றாலும்;
இயற்கை
அழிவுதான்
என்று,
மறு நாள் கூறும் அறிவியல் கண்டுபிடிப்பு;
என்னை
நீ
மறப்பதற்கு காரணம்
இந்நாள் கூறுவேன்
உன் பெற்றோரின் கண்டிப்பு!!!

வாழ்த்து

இனியவளே!
மார்ச் 14 [என் பிறந்த நாள்]
அமைதியை
கலைக்கும்
நோக்கத்துடன்
சுற்றும்
சூரியன்
தன் கதிரால்
வாழ்த்து சொல்ல...
ஆர்ப்பரிக்கும்
புல்லினங்கள்
ஆரவாரத்துடன்
வாழ்த்து சொல்ல...
இனிய பொழுதில்
இனிப்புடன்
மற்றவர்
வாழ்த்து சொல்ல...
ரோஜா மொட்டு
மலர்ந்து
மெல்லிசையுடன்
வாழ்த்து சொல்ல...
தென்றலும்
தேகத்தை உரசி
வாழ்த்து சொல்ல...
நம்பியிருக்கும்
நட்பும்
நன்றியுடன்
வாழ்த்து சொல்ல...
எதிர்ப்பார்த்தேன்
இதயத்தை
கொடுத்த
உன் வாழ்த்தை...!

அலட்சியம்

இனியவளே!
காலை
கதிரவன்
தன் விளையாட்டை
ஆரம்பித்த பொழுது,
அவனும்
திடுக்கிட்டுப் பார்க்க,
வெண்ணிலவு
வெட்க்கப் பட வந்த
புது நிலவாக
நீ
என்னை
அணைத்து
முத்தம் பதித்த நொடியும்;
மாலை கதிரவன்
ஓய்வுக்கு செல்லும் பொழுது,
மாலையை
மயக்க
மல்லிகை மலரும் பொழுது,
வசந்த பெண்ணிலவு
உன் மடியில்
நான்
தலை சாய்ந்த நொடியும்;
கனவாக
தோன்றியது
நீ
என்னை
அலட்சியமாக
மறந்த நொடியில்!!!

Thursday, March 13, 2008

காதல் தோல்வி

இனியவளே!
காலை
கதிரவன்
கண் விழிக்கும்
முன்னே
காளையவன்
கண் விழிக்க...
சொந்தம்
கொண்ட
தென்றல்
இல்லாத
சோக சோலையிலும்
அவன்
மோகத்தில் இருக்க...
எதுகையும்
எதார்த்தமாக
மோனையும்
மொத்தத்தில்
அவன்
கவிதைகளில் இருக்க...
ஆனால்
கட்டும்
புடவையாக
காதலை
(ஏ)மாற்றும்
காதலிகள் இருக்க...
உலகம்
நிற்கும் வரை
காதல்
தோல்விகள் இருக்கும்!