இனியவளே!
சூரியனாக இருந்து
உயிர் தந்தாய்!
நிலவாய் இருந்து
பொலிவு தந்தாய்!
சோலையாக இருந்து
தென்றல் தந்தாய்!
தமிழாக இருந்து
கவிதை தந்தாய்!
தனிமையாக இருந்து
அமைதி தந்தாய்!
இனியவளாக இருந்து
வாழ்க்கை தந்தாய்!
இதுப்போல
நான் கூறினாலும்
பிறப்பின் உணர்வை
வாழ்க்கையின் அர்த்தத்தை
வெற்றியின் ரகசியத்தை
சொன்ன
உன்னை
நான் மறப்பேனா?
என்
நினைவிருக்கும் வரை!
Saturday, February 09, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment