இனியவளே!
யாரும் இல்லாத
ஓடத்தில்
நான் பயணித்தேன்
செவ்வாயை நோக்கிய
பயணம்!
பயணத்தின் முடிவில்
செவ்வாய் கோளில்
நீரை கண்டறிந்தேன்!
தினம் தினம்
செய்திகளில்
என்னைப் பற்றி!
உலகம் தன் குடுமியில்
என்னைத் தூக்கி வைத்து
பாராட்டியது!
இதுப்போல
பல கனவுகளும்
உனக்காக
நான்
காத்திருக்கும் நேரத்தில்
விசாரித்து விட்டு
சென்றன என்னை!
Saturday, February 09, 2008
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
u r love article is very nice
Post a Comment