இனியவளே!
காலம்
என்னைத்
துரத்தும்!
நானும்
காலத்தைத்
துரத்துவேன்!
மராத்தான் ஓட்டமாக
காலமும்
நானும் ஓடுவோம்!
முடிவு
தெரிகிறதோ இல்லையோ
ஓடுவதில்
குறியாக இருந்தோம்!
காலத்திற்கு நானும்
எனக்கு காலமும்
ஜென்ம விரோதிப் போல
துரத்துவோம்!
காலம் ஓடுவதை
நிறுத்தி விட்டது;
நானேத் துரத்தினாலும்
ஓடவில்லை......
நான் உனக்காக
காத்திருக்கும் வேளையில்!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment