Monday, February 11, 2008

பயணம்

இனியவளே!
மனம் விட்டு பேச
உன் தோள் தேடினேன்?
கவலைகளை மறக்க
உன் மடி தேடினேன்?
தோல்விகளை தொலைக்க
உன் ஆதரவு தேடினேன்?
அதுவெல்லாம் இருக்கட்டும்!
இன்றாவது
என்னிடம் பேசுவாயா?
உன் நினைவுகளெல்லாம்
என் நிழலாக!
நாம் சந்தித்த நாட்களெல்லாம்
சிந்தனையில் ஓட!
என் நினைவெல்லாம்
உன்னை பற்றியே
நினைக்க!
முடிவெடுத்தேன்
உன்னைப் பார்க்க!
உன்னை நோக்கிய
என் பயணம் ஆரம்பம்....!

No comments: