Thursday, February 21, 2008

புலம்பல்

இனியவளே!
பல நாட்கள்
பழகியது
ஒரு நாளும்
மறக்க வில்லை!
பழகாத
ஒரு நாளும்
பல நாட்க்கள்
ஞாபகமில்லை!
நித்தம்
ஒரு கவிதை தந்தாய்!
பித்தம்
தலைக்கேற காதல் தந்தாய்!
சத்தம்
இல்லாமல் என் சகாப்தம் அழித்தாய்!
உன் குரல்
நான்
தினமும் கேட்கும் இன்னிசையோ!
உன் முகம்
நான்
தினமும் கனவில் பார்க்கும் முகமோ!

No comments: