இனியவளே!
சின்னதொரு பிரிவு
ஆடும் ஆட்டத்தையே
தாங்க முடியவில்லையே!
முடிவு தெரியாமல்
ஆடும் ஆட்டத்தை
நினைத்தால்
உயிர் மொத்தமும்
வாயின் வழியாக
எட்டிப் பார்க்குது!
தன்னந்தனியே
நான் நடக்கையில்,
"ஒரு வேளை
நீயில்லாத முடிவென்றால்"
என்னுயிர்க்கு கடைசியாக
இதயம் அடிக்கும்
அலாரமும்
துல்லியமாக கேட்குது!
நம்பிக்கை உள்ளதடி...!
என் உணர்வுகள்
உனை எட்டியதென்றால்,
உன் பிடிவாதத்தை
கை விடுவாய் என்று!
நானும் உன்னுடன் வாழ்வேன்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment