Saturday, February 09, 2008

உறவு

இனியவளே!
தேடிப்பார்த்தேன்
தென்றலையும்
காண வில்லை....
வருமென்று
நினைத்தேன்
வசந்தமும்
வரவில்லை....
எழுதலாம் என்று
நினைத்தேன்
கவிதையும்
வரவில்லை....
தெரிந்து விட்டது
என்னுடன் நீயில்லையென்று!
தென்றலாக
இதம் தரவில்லையென்றாலும்
வசந்தமாக
வாசம் தரவில்லையென்றாலும்
இனியவளாகி
என்
உயிர் தருவாயா?

No comments: