Thursday, January 24, 2008

கனவு

இனியவளே!
மரங்களெல்லாம்
எதிர் திசையில்
ஓடுவதை
ஜன்னல் வழியே ரசிக்கும்
பயண நேரத்திலும்,
தமிழ் வார்த்தைகளை
இசையோடு கோர்த்து
பாடிக் கொண்டே ரசிக்கும்
இனிமை நேரத்திலும்,
முதல் உலக பெண்
வரைந்த கோலத்திலுள்ள
புள்ளிகளை அன்னாந்து ரசிக்கும்
இரவு நேரத்திலும்,
என்னுடன் இருந்தாயே!
ஓ.....!
கனவாக் கண்டேன்!
கனவிலாவது
என்னுடன் இருக்கிறாயே....!

No comments: