Wednesday, February 04, 2009

கடவுள்

இனியவளே!
இல்லாத கடவுள் போல
பொல்லாத இதயம் கொண்ட
தோழியே!
என் மீது காதல்
உண்டென்றால் உண்டு!
இல்லையென்றால் இல்லை!
என்பதை மட்டும் சொல்;
இரவு வெறுக்கும் சூரியனாக,
பனி வெறுக்கும் வெயிலாக,
என்னை வெறுத்து விடாதே!
உன் நினைவை
சுமந்த படி
துடிக்கும் இதயத்திற்கு
நிரந்தர விடுமுறை அளிக்காதே!
ஒரே சமயத்தில்
என்னை
மனிதனாகவும், பைத்தியமாகவும்
மாற்றியவளே!
என் காதலை அழிக்காதே....!

Friday, October 10, 2008

காதல் சக்தி

இனியவளே!
உன்னிடம்
நான்
காதலை சொல்ல
பறித்த
ரோஜாதான்
எத்தனை சறுகாயிருக்கலாம்?
என் காதலை
காவியமாக தாங்கிய
தாள்கள்தான்
எத்தனை கிழிக்கப்பட்டுருக்கலாம்?
உன்னை
வர்ணித்து
கவி எழுத
தமிழிடம்
வார்த்தைகள் எத்தனை
கடன்பட்டுயிருக்கலாம்?
இதுவெல்லாம் இருக்கட்டும்.....!
உனக்கு மட்டும்
ஏன் இந்த சக்தி....?!
காதலை சொல்லுவதற்கு
முன்பே
அதை தடுக்கும்
உன் பார்வை;

Friday, August 15, 2008

காதலன்

இனியவளே!
என்னுடன்
கண்ணோடு கண்
பேசி
காதல் செய்ய
காதலி வருவாயா?
உயரத்தில்
கதிரவன்தான்
குடை பிடிக்க
காதல் செய்ய
காதலி வருவாயா?

நம்முடன்
தென்றல்தான்
துணைக்கு இருக்க
காதல் செய்ய
காதலி வருவாயா?

கைகள்தான் தொடாமல்
தொட்டு
காதல் செய்ய
காதலி வருவாயா?

இதுவெல்லாம் வேண்டாம்
காதலன்
நீதான் என்று
காதலை சொல்ல
காதலி வருவாயா?

வாழ்க்கை

இனியவளே!
சிரித்துக்
கொண்டே
என்னை
அழ வைக்கிறாயே...!
ஏன்
காதலித்து
கொண்டே
என்னை
வாழ வைக்கலாமே....!!!!

நினைவு

இனியவளே!
கதிரவன் தான்
காலையில்
விழிக்காமல்
இருந்தாலும்;
உயிரிகள்தான்
உறக்கம்
தெளியாமல்
இருந்தாலும்;
தென்றல்தான்
இதம்
தராமல்
இருந்தாலும்;
நான்
உன் நினைவு
இல்லாமல் இருக்க மாட்டேன்!!!

Wednesday, August 06, 2008

ஒற்றைகால் ரோஜா

இனியவளே!
ஒற்றைக்காலில்
நிற்கும்
ரோஜாவை
பறித்து,
அதை
ஊனப்படுத்தி
உன்னிடம்
கொடுத்து
வந்த காதல்
பின்பு
என் மனதை
ஊனப் படுத்தி விடுமா?
நீ
என் காதலை மறுப்பதால்...!
ரோஜாவும் முள்ளும்
ஒன்றாகதான் உள்ளது;
அது காதலாகாதுதான்!
நிலவும் மேகமும்
ஒன்றாகதான் உள்ளது;
அது காதலாகாதுதான்!
ஆனால்
எனக்கும் உனக்கும்
காதல் இல்லை
என்று கூறாதே!!!

Tuesday, August 05, 2008

தூது

இனியவளே!
தென்றலே
என்னவளிடம்
காதலை சொல்லுவாயா?
அவள் இல்லாமல்
நீயும் சுடுகிறாயே!
சூரியனே
என்னவளிடம்
காதலை சொல்லுவாயா?

அவள் இல்லாமல்
என் பொழுது விடிய வில்லையே!
நிலவே
என்னவளிடம்
காதலை சொல்லுவாயா?

அவள் இல்லாமல்
உன்னையும் பிடிக்கவில்லையே!
நதியே
என்னவளிடம்
காதலை சொல்லுவாயா?

அவள் இல்லாமல்
உன் ஓட்டம்தான் பிடிக்கவில்லையே!
நீங்களாவது
அவளிடம்
என் காதலை சொல்லுவீர்களா?
ஏனென்றால்
அவள் விழியை
பார்த்த பின்
என் காதலைதான்
மறைத்து விடுகிறேனே..............!

சமத்துவ சமுதாயம்

இனியவளே!
இறந்தவர்களை
புகழ்கிறது
சமுதாயம்;
இல்லாதவர்களை
வர்ணிக்கிறது
சமத்துவம்;
ஆனால்
இறக்காமல்
இருக்கும்
உன்னைப்பற்றி
மட்டும்
பேசும்
என் கவிதை.....!
சோலையும்
தேன்றலையும்
பிரிக்க முடியாது;
சூரியனையும்
பிரகாசத்தையும்
பிரிக்க முடியாது;
விண்மீனையும்
இரவையும்
பிரிக்க முடியாது;
அதுப்போல
உன் நினைவையும்
என்னையும்
பிரிக்க முடியாது;

Sunday, August 03, 2008

கவிதையா? நானா?

இனியவளே!
உன்னை
வர்ணித்து
கவிதை எழுதி தந்தேன்;
அதை
படித்த
நீ
என்னை
விரும்பாமல்
கவிதையை விரும்பினாய்;
உனக்கு தெரியுமா?
உன்னை
உயிருக்குயிராய்
விரும்புவது
கவிதை அல்ல....!
நான்தான்....!
உன் விழியை
கூர்மையானது
என்றேன்;
தவறாகிவிட்டது
ஏனென்றால்
உன் விழி
என் இதயத்தையே
கிழித்து விட்டது

Saturday, August 02, 2008

காதல் கடவுள்

இனியவளே!
கண்ணை விட
இதயம்
கடினமானது.....!
சிறு தூசு
விழுந்தாலும்
கண் கலங்குகிறது;
ஆனால்
காதலிக்காத
உன் வார்த்தையை....
அதாவது
இடி போன்ற
உன்
வார்த்தையை
இதயம் தாங்குகின்றது....!
இடியை
தாங்கும்
என்னிதயம் கடினமானதுதானே!
காதலும்
இறைவனை போன்றது;
உண்டு என்றால் உண்டு;
இல்லை என்றால் இல்லை;
உணர்பவனுக்கு உண்டு;
உணராதவனுக்கு இல்லை;
காதலும்
இறைவனை போன்றது....